4 மாநில சட்டமன்ற தேர்தல்களின் வாக்குகள் ஞாயிறன்று எண்ணப் பட்டன. இதில் தென்னிந்திய மாநி லமான தெலுங்கானாவில் பாஜகவின் கனவு பலிக்காத நிலையில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 வடமாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேற்குறிப்பிட்ட 3 வடமாநிலங்களிலும் பாஜகவின் வெற் றிக்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று “இந்தியா” கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஒருங்கி ணைத்து செல்லாதது. மற்றொன்று மாயாவதியின் “பகுஜன் சமாஜ்” கட்சி காங்கிரஸ் கட்சிகளுக்கு விழும் வாக்கு களை பிரித்தது ஆகும்.
பகுஜன் சமாஜ் கட்சி அதிகபட்ச மாக மத்தியப்பிரதேசத்தில் 3.30 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 2.03 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 1.82 சத வீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ் கட்சி யின் வாக்குப்பிரிப்பு உத்தி பிஆர்எஸ் கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்திய நிலையில், அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 1.38 சதவீத வாக்குகள் பெற்றுள் ளன. 4 மாநிலங்களிலும் போதுமான வாக்குகளை பெற்றாலும், ராஜஸ்தா னில் மட்டுமே 2 தொகுதிகளை (1 வெற்றி, 1 முன்னிலை) பகுஜன் சமாஜ் கைப்பற்றியுள்ளது. பாஜகவிற்கு எதி ராக விழும் அதிருப்தி வாக்குகளை பகு ஜன் சமாஜ் பிரிக்காமல் இருந்து இருந் தால் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், மத்தி யப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் வெற்றியை வசமாக்கி இருக் கும் என்பது குறிப்பிடத்தக்கது. (மாலை 5 மணி நிலவரம்).